மலேசியாவில் இந்த ஆண்டு வெப்பம் தொடர்பான 15 பாதிப்புகள் பதிவாகி உள்ளன, இதில் ஒரு குழந்தையின் மரணமும் அடங்கும் என சுகாதார அமைச்சர் சுல்கெஃப்லி அமாட் தெரிவித்தார்.
முகநூல் பதிவில், கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.
தொடர்ச்சியான தலைச்சுற்றல், அதிக தாகம் மற்றும் உடல் வெப்பநிலை அதிகரித்தல் போன்ற வெப்ப பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிக்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
“இந்த அறிகுறிகள் தோன்றினால், நிழலைத் தேடுதல், அதிக தண்ணீர் குடித்தல் மற்றும் உடலை விரைவாகக் குளிர்வித்தல் போன்ற உடனடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்,” என்று அமைச்சர் கூறினார்.
மேலும், குழந்தைகளை வாகனங்களில் “ஒரு நிமிடம் கூட” கவனிக்காமல் விட்டுச் செல்லக்கூடாது தனித்தனியாக, மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா), குறைந்தது மூன்று தொடர்ச்சியான நாட்களுக்கு 35°C முதல் 37°C வரை வெப்பநிலை பதிவானதைத் தொடர்ந்து, மேலும் இரண்டு பகுதிகள் நிலை ஒன்று (எச்சரிக்கை) கட்டுப்பாட் டின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது என்றார் அவர்




