பிலிப்பைன்ஸின் தாகேடே நகரில் மார்ச் 25 முதல் 31 வரை நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் (ACC) போட்டிகளில், தேசிய டிராக் சைக்கிளிங் ராணியான நூருல் இஷா இஸ்ஸாட்டி அஸ்ரியின் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியின் மீது அனைவரின் பார்வையும் இருக்கும்.
கடந்த முறை நிலாய் நகரில் நடைபெற்ற போட்டியில், முன்னாள் கெய்ரின் உலக சாம்பியனான டத்துக் அஜிசுல்ஹாஸ்னி அவாங் இல்லாத நிலையில், சிறு உருவம் கொண்ட இஸ்ஸா நான்கு பதக்கங்களை வென்று அணியின் நாயகியாகத் திகழ்ந்தார்.
கெடாவைச் சேர்ந்த இவர், பெண்களுக்கான 1 கி.மீ. டைம் டிரையல் போட்டியில் 1:06.229 வினாடிகளில் புதிய ஆசிய சாதனையைப் படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும், தனது கெய்ரின் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டதுடன், குழு ஸ்பிரிண்ட் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், தனிநபர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
இருப்பினும், 23 வயதான இவர் இந்த ஆண்டு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியுள்ளார். தாகேடே நகர வெலோட்ரோமில் தனது முத்திரையைப் பதிக்க அவர் முனைவார். என எதிர்பார்க்கப் படுகிறது!




