Vimarsagan Media

Home » Uncategorized » புதிதாக பிறந்த குழந்தையின் சடலம் கழிப்பறையில் மீட்பு

புதிதாக பிறந்த குழந்தையின் சடலம் கழிப்பறையில் மீட்பு

மலாக்கா : தாமான் பண்டாராயா புக்கிட் செரிண்டிட்டில் உள்ள பொது கழிப்பறையில் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 18 பதின்ம வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பிரசவத்தின்போது இரத்தப்போக்கு ஏற்பட்டதாக நம்பப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மலாக்கா மருத்துவமனையில் அந்த பெண் கைது செய்யப்பட்டதாக மலாக்கா காவல் துறைத் தலைவர் சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

நேற்று இரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் அந்தப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக நம்பப்படுகிறது என்று சுல்கைரி தெரிவித்தார்.

“ஆரம்ப விசாரணையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாது என்பது கண்டறியப்பட்டது, மேலும் சந்தேக நபர் குழந்தையைப் பெற்றெடுத்ததாக ஒப்புக்கொண்டதாகவும், குழந்தை ஏற்கனவே அவரது வீட்டில் இறந்துவிட்டதாகக் கூறப்படுவதாகவும் ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

“பின்னர் அப்பெண் மோட்டார் சைக்கிளில் ஏறி குழந்தையின் உடலை தனது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பொது கழிப்பறையில் போட்டு வந்துள்ளார் என சினார் ஹரியன் மேற்கோள் காட்டியது.

ஒரு குழந்தையின் உடலை ரகசியமாக அப்புறப்படுத்துவதன் மூலம் பிரசவத்தை மறைத்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 318 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அந்த இளம்பெண் தடுத்து வைக்கப்பட்டதாக சுல்கைரி கூறினார்.

Scroll to Top