Vimarsagan Media

Home » Malaysia » அனைத்துலக மோசடி கும்பல் 16 முக்கிய சந்தேக நபர்கள் கைது

அனைத்துலக மோசடி கும்பல் 16 முக்கிய சந்தேக நபர்கள் கைது

சீன அதிகாரிகளுடன் இணைந்து, சீன நாட்டவர்களால் நடத்தப்படும் அனைத்துலக மோசடி கும்பலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அகற்றியுள்ளது. சந்தேக நபர்கள் அவர்களின் சொந்த நாட்டிலும் அதிகாரிகளால் தேடப்பட்டனர்.

ஓப் டிராகனின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை, மலேசியா உட்பட பல நாடுகளில் இயங்குவதாக நம்பப்படும் ஒரு கும்பல் வலையமை ப்பை குறிவைத்தது. பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற பல தொடர்பு தளங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி கும்பல் எல்லை தாண்டிய மோசடியை நடத்தியது.

MACC சிறப்பு செயல்பாட்டுப் பிரிவின் மூத்த இயக்குனர் டத்தோ முகமது ஜம்ரி ஜைனுல் அபிடின் கூறுகையில், பல ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் நாட்டில் மறைந்திருந்த கும்பலின் தலைவர்கள் என்று நம்பப்படும் 16 முக்கிய சந்தேக நபர்களை கைது செய்ய வழிவகுத்தன.

Scroll to Top