v கடந்த மாதம் செராஸில் ஒரு ஸ்பானிஷ் சுற்றுப் பயணியைக் காயப்படுத்திய ஒரு கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப் படும் இரண்டு ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
27 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை செராஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாக செராஸ் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ரோஸ்டி தாவூத் தெரிவித்தார்.
தாமான் மிடா பகுதியில் 20 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண் கொள்ளையடிக்கப் பட்ட பின்னர் பிப்ரவரி 17 ஆம் தேதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அவரது முழங்கால், தோள்பட்டை மற்றும் இடது கையில் மென்மையான திசுக் களில் காயங்கள் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.
திருட்டில் ஏற்பட்ட இழப்புகள் RM2,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் கொள்ளையின் போது காயம் ஏற்படுத்தி யதாக வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது.




