Vimarsagan Media

Home » Malaysia » கேள்வி பிறந்தது எங்கே…நல்ல பதிலும் கிடைத்தது அங்கே!

கேள்வி பிறந்தது எங்கே…நல்ல பதிலும் கிடைத்தது அங்கே!

யார் யாரிடம் கேள்விகள் கேட்கவேண்டும் என்பதும் மிக முக்கியம். எந்த விஷயத்தையும் அது சம்பந்தப்பட்ட நபரிடம் தான் கேட்க வேண்டும். இதைவிட்டு விட்டு சம்பந்தமே இல்லாத நபரிடம் கேட்டு பதிலைப் பெற்று காரியம் செய்தால் செய்ய வேண்டிய காரியம் கெட்டு விடும். காலமும் வீணாகும். பிறகு காலம் சரியில்லை, நேரம் சரியில்லை, மனிதர்கள் சரியில்லை என்று குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

காரணம் கேள்விகளிலிருந்து பிறப்பது தெளிவு, தெளிவிலிருந்து பிறப்பது அறிவு, அறிவிலிருந்து தொடர்ந்து வருவது அறிவு வளர்ச்சி. அறிவு வளர்ச்சியிலிருந்து தோன்றுவது சிந்தனை புரட்சி, சிந்தனை புரட்சியிலிருந்து பிறப்பது மனித வாழ்வில் புதுமை மறுமலர்ச்சி. மனிதனுடைய வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மறுமலர்ச்சி இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மனிதனுடைய மன வளர்ச்சி மேம்பாடு கண்டு வாழ்வும் செழித்தோங்கும்.

இதுதான் மனித குல பரிணாம வளர்ச்சி. வாழ்க்கையில் முடிந்து போனதை நினைத்து வருந்தவும் வேண்டாம். வரப்போவதை நினைத்து கவலைப்படவும் வேண்டாம். நடப்பவை நடந்து கொண்டே தான் இருக்கும். நாலு பேருக்கு எப்படி நல்லது செய்யலாம் என்று மட்டும் நினையுங்கள்.

Scroll to Top