Vimarsagan Media

Home » World » வடகொரியாவும் ஜப்பான் கடற்கரையில் 10 பாலிஸ்டிக் gஏவுகணை தாக்குதல்

வடகொரியாவும் ஜப்பான் கடற்கரையில் 10 பாலிஸ்டிக் gஏவுகணை தாக்குதல்

தென் கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியில் இன்று ஈடுபட்டுள்ள நிலையில், வடகொரியாவும் ஜப்பான் கடற்கரையை நோக்கி 10 ஏவுகணைகளை ஏவியதால் பதற்றமான சூழல் நிலவியது.

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது.

வெனிசுலா, ஈரானை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த இலக்கு வடகொரியாவை நோக்கி இருக்கலாம் என்று அனைத்துலக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று அமெரிக்காவும், தென்கொரியா வீரர்களும் இணைந்து ராணுவ கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கு பதிலடியாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவின் பேரில்,10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அந்த நாட்டுப் படையினர் ஏவியுள்ளனர்.

இது குறித்து, ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகொரியா ஏவிய ஏவுகணைகள் ஜப்பானில் விழுந்துள்ளது. இந்த ஏவுகணைகளால் எந்தவொரு விமானங்கள் அல்லது கப்பல்களுக்கும் சேதம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Scroll to Top