கோத்தா கினபாலு: இந்த ஆண்டு கூடுதல் ஹரி ராயா விடுமுறையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
ஹரி ராயா வெள்ளிக்கிழமை (மார்ச் 20) வந்தால், அதற்கு அடுத்த திங்கள் (மார்ச் 23) கூடுதல் விடுமுறையாக இருக்கும் என்றும், அது சனிக்கிழமை (மார்ச் 21) வந்தால், அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை (மார்ச் 20) கூடுதல் விடுமுறை இருக்கும் என்றும் அவர் கூறினார்.
(மார்ச் 15) தேசிய நுகர்வோர் தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்து அவர் இவ்வாறு கூறினார்.




