Vimarsagan Media

Home » Malaysia » ஒருவரையொருவர் மன்னித்து, உறவுகளை வளர்ப்போம்:-பஹ்மி

ஒருவரையொருவர் மன்னித்து, உறவுகளை வளர்ப்போம்:-பஹ்மி

நாட்டின் பன்முக கலாச்சார சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தவும், கருணை மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க வும், அத்துடன் மனிதாபிமான விழுமி யங்களை மேம்படுத்தவும் பெருநாள் கொண்டாட்டங்களை ஒரு வழியாகப் பயன்படுத்த வேண்டும்

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பஹ்மி ஃபட்சில் கூறுகையில், பெருநாள் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் வலிமைக்கு அடித்தளமாக அமையும் ஆன்மீகம் மற்றும் பணிவின் சின்ன மாகும் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்த காலகட்டத்தில், நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதை உறுதிசெய்ய மனிதாபிமான விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

“தொழில்நுட்பம் நம்மைப் பிரிக்கும் பிரிவினைவாதிகளாக அல்லாமல், ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் கருணையைப் பரப்பவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

பன்முக கலாச்சார நாட்டில் வாழும் மலேசியர்களாகிய நாம், பரஸ்பர மரியாதை, சகிப்புத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகிய விழுமியங்களைத் தொடர்ந்து புகட்டுவோம்.” “பல்வகைமையிலிருந்து உருவாகும் ஒற்றுமையே நமது நாட்டின் வலிமைக்கு அடித்தளம்,” என்று அவர் வெள்ளிக்கிழமை முகநூலில் பதிவிட்ட காணொளி ஒன்றில் கூறினார்.

இதற்கிடையில், இனம், மதம், கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மலேசியர்கள் ஒருவரையொருவர் மன்னித்து, நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் வலியுறுத்தினார்.

Scroll to Top