ஐடில் ஃபிட்ரி கொண்டாட்டம் மலேசியா முழுவதும் பாரம்பரிய நல்லெண்ண உணர்வைத் தொடர்ந்து வளர்த்து வருகிறது. பல மாநிலங்களில் நடைபெற்ற பெருநாள் கொண்டாட்டங்கள், ஒற்றுமை மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் துடிப்பின் வெளிப்பாடாகப் பெருந்திரளான மக்களை ஈர்க்கின்றன.
சரவாக்கில், யாங் டி-பெர்டுவான் நெகிரி சரவாக் துன் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாப்பர் மற்றும் தோ புவான் ஃபௌசியா முகமது சனுசி ஆகியோரால் நடத்தப்பட்ட நோன்பு பெருநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வ தற்காக, கூச்சிங்கில் உள்ள அஸ்தானா நெகிரி மைதானத்திற்கு நேற்று காலை 9 மணி முதலே ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வரத் தொடங்கினர்.
பல்வேறு வயது, இனம் மற்றும் மதங்களைச் சேர்ந்த, பலதரப்பட்ட பின்னணியிலிருந்து வந்த விருந்தினர்களுக்குப் பல்வேறு வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. மேலும், ஒரு சுமுகமான சூழலில் மாநிலத் தலைவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.
ஜொகூரில், ஜொகூர் பாருவின் சௌஜானாவில் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸியால் நடத்தப்பட்ட ஈ பொது இல்ல திறப்பு விருந்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காலை 8 மணி முதலே கூடினர்.
பங்கேற்பாளர்களுக்கு கெத்துபாட், லெமாங், ரெண்டாங், சோட்டோ மற்றும் மை ரெபஸ் உள்ளிட்ட பாரம்பரிய மற்றும் நவீன உணவு வகைகளும், கேக்குகள் மற்றும் பானங்களின் பரந்த தேர்வுகளும் வழங்கப்பட்டன.
மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் 20,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலானில், யாங் டி-பெர்டுவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் மற்றும் துங்கு அம்புவான் பெசார் துவாங்கு ஐஷா ரோஹானி ஆகியோர் குவாலா பிலாவில் உள்ள இஸ்தானா பெசார் செரி மெனந்தியில் நடந்த இஸ்தானா திறந்த இல்ல ஐடில் பிட்ரியை அலங்கரித்தனர்.




