Vimarsagan Media

Home » Malaysia » பொது இடங்களில் குப்பைக் குற்றம் பின் தெருவைக் கூட்டும் கப்பம்!

பொது இடங்களில் குப்பைக் குற்றம் பின் தெருவைக் கூட்டும் கப்பம்!

பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றத்திற்காக, சிரம்பான் பண்டார் ப்ரிமா செனாவாங்கில் ஒன்பது நபர்களுக்கு சமூக சேவை உத்தரவுகள் (CSOs) விதிக்கப்பட்டன.

இந்த வழக்கு, திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைச் சட்டம் 2007 (சட்டம் 672)-இன் கீழ் கையாளப்படுகிறது.

மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள இரண்டாவது சமூக சேவை உத்தரவுகளில், 20 முதல் 57 வயதுக்குட்பட்ட குற்றவாளிகள் அடங்குவர்.

ஆறு மாதங்களுக்குள் நான்கு மணிநேர சமூக சேவை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது; இதில், பெருக்கி சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் அடங்கும்.

பொதுமக்கள் எல்லா இடங்களிலும் குப்பை கொட்ட வேண்டாம் என்றும், வழங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துமாறு குற்றவாளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.மேற்கொள்ளப்படும் பணிகளில், பொது இடங்களைப் பெருக்குதல் மற்றும் சுற்றுப்புறத்தை ஒழுங்குபடுத்துதல் போன்றவையும் அடங்கும்

Scroll to Top