கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை ஜூன் 15-ம் தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, கடந்த சில ஆண்டுகளாகப் பொது நிகழ்ச்சிகளில் தென்படாதது குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனு இன்று (ஏப்ரல் 20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது.
சங்கீதா தாக்கல் செய்த மனுவில் நடிகர் விஜய் மீது மிக முக்கியமான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்




