Vimarsagan Media

Home » Malaysia » O’ வகை இரத்தம் அனைவருக்கும் பொருந்தக் கூடிய தன்மையாவதால் மலேசியாவில் அதுவே அதிகம் தேவை

O’ வகை இரத்தம் அனைவருக்கும் பொருந்தக் கூடிய தன்மையாவதால் மலேசியாவில் அதுவே அதிகம் தேவை

தேசிய இரத்த வங்கி மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையிலும், ‘O’ வகை இரத்தம் அனைவருக்கும் பொருந்தக் கூடிய தன்மை கொண்டிருப்பதால், மலேசியாவில் அதுவே அதிக தேவை உள்ள இரத்தக் குழுவாகத் தொடர்ந்து இருந்து வருகிறது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தேசிய இரத்த வங்கி இயக்குநர் டாக்டர் நூர் நஸாஹா மஹ்மூட் கூறுகையில், ‘O’ வகை இரத்தம் அனைத்து முக்கிய இரத்தக் குழுக்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் செலுத்தப் படக்கூடியது என்பதால், அது சுகாதார அமைப்பில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார்.

“A, B, AB மற்றும் O இரத்தக் குழுக்களைக் கொண்ட நோயாளிகளுக்கு O வகை இரத்தத்தைப் பயன்படுத்தலாம். “ஒரு நோயாளியின் இரத்தக் குழு இன்னும் கண்டறியப்படாத அவசர சூழ்நிலைகளிலும் O வகை இரத்தம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார். அதன் பன்முகத்தன்மை இருந்த போதிலும், எந்தவொரு நேரத்திலும் இரத்தத்திற்கான தேவை, இறுதியில் மருத்துவமனைகளில் இரத்தமாற்றம் செய்யப்படும் நோயாளிகளின் தேவை களைப் பொறுத்தே அமைகிறது என்று அவர் மேலும் கூறினார்.

O மற்றும் A வகை இரத்தங்களின் தற்போதைய இருப்பு நெருக்கடியில் உள்ளது என்றும், இந்த இரத்த வகைகளைக் கொண்ட தனிநபர்கள் இரத்த தானம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றும் டாக்டர் நார் நஸாஹா வெளிப்படுத்தினார்.

“O மற்றும் A வகை இரத்தத்தில் தற்போது கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஒவ்வொரு நோயாளியும் அவரவர் இரத்த வகைக்கு ஏற்ப சரியான மற்றும் பாதுகாப்பான இரத்தமாற்றத்தைப் பெறுவதை உறுதிசெய்ய, அனைத்து இரத்தக் குழுக்களும் முக்கியமானவை மற்றும் தொடர்ந்து தேவைப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

Scroll to Top