Vimarsagan Media

Home » World » ஓஹியோ ஆளுநர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் விவேக் ராமஸ்சுவாமி வெற்றி

ஓஹியோ ஆளுநர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் விவேக் ராமஸ்சுவாமி வெற்றி

செவ்வாய்க்கிழமை அன்று ஓஹியோ ஆளுநர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் விவேக் ராமஸ்வாமி வெற்றி பெற்றார். இதன் மூலம், டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான அவர், ரஸ்ட் பெல்ட் மாநிலத்தை ஆளும் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.

அமெரிக்க ஊடக அறிக்கைகளின்படி, அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளில், வாகனங்கள் தொடர்பான யூடியூப் சேனலைக் கொண்ட கார் வடிவமைப்பாளரான கேசி புட்ஷை அவர் தோற்கடித்து பொதுத் தேர்தலில் இடம்பிடித்தார்.

சுகாதார-தொழில்நுட்ப தொழில் முனைவோரான ராமஸ்வாமி, 2024-ல் டிரம்புக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி யடைந்தபோது தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றார். பின்னர் அவர் டிரம்புக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

ஓஹியோவின் முதன்மைத் தேர்தலில், குடியரசுக் கட்சியினருக்கு எதிராகப் போட்டியிட்டபோதிலும், அவர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஏமி ஆக்டன் மீது கவனம் செலுத்தினார். இவர் ஓஹியோவின் முன்னாள் பொது சுகாதார இயக்குநராக இருந்து, கோவிட் பெருந்தொற்றுக்கு மாநிலத்தின் பதிலளிப்புக்கு வழிகாட்டி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

வெற்றி உரையின் போது, ​​ராமஸ்வாமி ஓஹியோ வாக்காளர்களுக்கு “இந்த நிலைக்கு எங்களைக் கொண்டு வந்ததற்காக” நன்றி தெரிவித்தார். மேலும், “நவம்பரில்தான் உண்மையான இலக்கு உள்ளது” என்றும் கூறினார்.

பொதுத் தேர்தலில் ராமஸ்வாமியை எதிர்கொள்ளவிருக்கும் ஆக்டன், தனது வெற்றி உரையில், ஓஹியோவை மீண்டும் மலிவு விலையில் வாழ வைப்பதற்காகவே ஆளுநர் பதவிக்குப் போட்டியிடுவதாகக் கூறினார்.

பதவிக்கால வரம்புகள் காரணமாக, ஓஹியோவின் தற்போதைய ஆளுநரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மைக் டிவைனால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது.

செவ்வாயன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் டிரம்ப் ராமஸ்வாமியைப் புகழ்ந்துரைத்தார்: “எனக்கு விவேக்கை நன்றாகத் தெரியும், அவருடன் போட்டியிட்டிருக்கிறேன், அவர் ஒரு தனித்துவமானவர். அவர் இளமையானவர், வலிமையானவர், மற்றும் புத்திசாலி!” என்றார்

Scroll to Top