ரேபிட் கேஎல் தனது அதிகாரப்பூர்வ X கணக்கு மூலம் வெளியிட்ட அறிவிப்பில், வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் மற்றும் டச் ‘என் கோ இ-வாலட் செயலி மூலமாகவும் My50 அட்டைகளை முன்கூட்டியே வாங்கும் வசதி இனி கிடைக்காது என்று பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் காரணமாக, பயணிகள் ஒரு புதிய அட்டையை வாங்குவதற்கு அல்லது செயல் படுத்துவதற்கு முன்பு, தங்களின் தற்போதைய My50 அட்டை காலாவதியாகும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
இந்த முடிவிற்கான காரணத்தை ரேபிட் கேஎல் அந்த அறிவிப்பில் குறிப்பிட வில்லை.
இந்த அறிவிப்புடன், “முன்கூட்டியே வாங்கும்” வசதி நிறுத்தப்படுவது ஜூன் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு தகவல் சுவரொட்டியும் வெளியிடப்பட்டது.
My50 அட்டை என்பது RM50 விலையுள்ள ஒரு மாதாந்திர வரம்பற்ற பயண அட்டையாகும். இது கிள்ளாங் பள்ளத்தாக்கு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேபிட் கேஎல் ரயில் மற்றும் பேருந்து சேவைகளில் பயனர்கள் வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, பயணிகள் அதன் உதவி எண் அல்லது டச் ‘என் கோ இ-வாலட் வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு ரேபிட் கேஎல் அறிவுறுத்தியுள்ளது




