ஜூன் 1 முதல், புத்ராஜயா மாநகரா ண்மை கழகத்தின் (PPj) கீழ் இயங்கும் உணவு மையங்கள், பொதுச் சந்தைகள் மற்றும் சிறு கடைகளில் வியாபாரி களிடமிருந்து பொருட்களை வாங்கும் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு 10% முதல் 15% வரை தள்ளுபடி வழங்கப்படும்.
12 மாதங்களுக்குச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், அதே காலகட்டத்தில் புத்ராஜயாவில் உள்ள இந்த வளாகங்களில் உள்ள வியாபாரிகளுக்கு 30% வாடகைத் தள்ளுபடியுடன் சேர்த்து அறிமுகப்படுத்தப்படும்.
இந்தத் தள்ளுபடியைப் பெற, வியாபாரிகள் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து வாடகைப் பாக்கிகளையும் செலுத்த வேண்டும்.
நேற்று இதை அறிவித்த, பிரதமர் துறையின் (கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ, இந்த நடவடிக்கைகள் சுமார் 240 வியாபாரிகளுக்குப் பயனளிக்கும் என்று கூறினார்.
குறைந்த வருமான ஆதாரங்களைக் கொண்ட வியாபாரிகள் மற்றும் மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.
பல சிறு வணிகர்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதையும், அவர்கள் பிழைத்து வாழ இலக்கு வைக்கப்பட்ட உதவி முக்கியமானது என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.
“இந்த வாடகைக் கழிவு மூத்த குடிமக்களுக்கும் ஒரு நேர்மறையான கூடுதல் பலனை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
புத்ராஜயாவில் உள்ள ஜாலான் P9-இல் அமைந்துள்ள பிரசிங்ட் 9 உணவுக்கூடத்தை, கூட்டரசுப் பிரதேச துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முஹம்மது அஸ்மி முகமது ஜைன் மற்றும் PPj தலைவர் டத்தோ முகமது சகேரி அப்துல் காதிர் ஆகியோருடன் பார்வையிட்ட பிறகு, யோ ஊடகங்களிடம் பேசினார்




