பைட் டான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்ததாலும், அந் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) இலக்குகளில் ஏற்பட்ட மேலும் முன்னேற்றத்தாலும், ஜாங் யி மிங் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் ஆனார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஜாங்கின் நிகர மதிப்பு 92.8 பில்லியன் டாலராக உயர்ந்து, சீனாவின் பணக்காரர் என்ற அவரது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் 2019-ல் ப்ளூம்பெர்க் அவரது செல்வத்தைக் கண்காணிக்கத் தொடங்கியபோது, 13 பில்லியன் டாலர் மதிப்புடன் இருந்த பைட் டான்ஸ் இணை நிறுவனரின் செல்வம், தற்போது ஏழு மடங்குக்கும் மேலாகப் பெருகியுள்ளது.
பைட் டான்ஸின் வீடியோ செயலியான டிக்டாக் மற்றும் அதன் டூபாவோ செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ஆகியவற்றின் வெற்றியின் மத்தியில் இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது. டூபாவோ, மாதந்தோறும் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் குவித்து, சீனாவின் மிகவும் பிரபலமான செயலியாக மாறியுள்ளது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பைட்டான்ஸ் தனது அமெரிக்க வணிகத்தின் சில பகுதிகளை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு மாற்றியது.
“மதிப்பீட்டில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, நிறுவனத்தின் வலுவான அடிப்படைகளையும், சீனாவில் டூபாவோ போன்ற அதன் செயலிகளின் வெற்றியையும் பிரதிபலிக்கிறது,” என்று ஷாங்காயைத் தளமாகக் கொண்ட கேபிடல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் ஏமி லின் கூறினார். “




