மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரரான ராபர்ட் குவோக்கின் வணிகப் பேரரசின் ஒரு பகுதியான பிபிபி குழுமம், அவரது பேரன் குவோக் மெங் சியோங்கை தனது புதிய குழும நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது.
, 45 வயதான மெங் சியோங், தற்போதைய குழும நிர்வாக இயக்கு நரான லிம் சூன் ஹுவாட்டிடமிருந்து செப்டம்பர் 1 முதல் பொறுப்பேற்பார். 61 வயதான லிம், இந்தப் பொறுப்பிலிருந்து விலகி, இயக்குநர்கள் குழுவின் ஆலோசகராகப் பொறுப்பேற் பார் என்றும் அந்த அறிக்கைகள் தெரிவித்தன.
மெங் சியோங் தற்போது குவோக் (சிங்கப்பூர்) நிறுவனத்தில் மாற்று இயக்குநராகவும், குவோக் பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட PPB-யின் ஆண்டு அறிக்கையின்படி, குவோக் பிரதர்ஸ் என்பது அவரது தாத்தாவின் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனமாகும், இது PPB குழுமத்தில் கட்டுப்பாட்டுப் பங்குகளைக் கொண்டு உள்ளது.
“இந்த நியமனம் வாரியத்தின் வாரிசுத் திட்டமிடலின் ஒரு பகுதியாகும், மேலும் டத்தோ குவோக் (மெங் சியோங்) நிறுவனத்தின் வலுவான அடித்தளங் களை மேலும் வலுப்படுத்தி, குழுமத்தை அதன் அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழிநடத்துவார் என்று வாரியம் நம்பிக்கையுடன் உள்ளது,” என்று தி எட்ஜ் மலேசியா மேற்கோள் காட்டிய ஒரு அறிக்கையில் PPB கூறியுள்ளது.




