Vimarsagan Media

Home » Entertainment » ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி

ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் ஆர்த்தி ‘ரவிமோகன் தனது குழந்தைகளின் படிப்பு செலவுகள் உள்ளிட்ட எந்த ஜீவனாம்சமும் தரவில்லை. அதனை தர உத்தரவிட வேண்டும்’ என்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிமன்றம் விசாரணை க்கு ஏற்கவில்லை. இதை தொடர்ந்து. வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆர்த்தி. இதனை ஏற்று ஆர்த்தியின் ஜீவனாம்ச கோரிக்கை மனுவை 2 வாரத்திற்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று குடும்ப நல கோர்ட்டிற்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து உயர்நீதிமன்றம் விதித்த காலகெடுவை நீடிக்க வேண்டும் என்று ரவிமோகன் மனுதாக்கல் செய்தார். ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. ரவிமோகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளுமாறு ரவிமோகனுக்கு உத்தரவிட்டது.

Scroll to Top