Vimarsagan Media

Home » World » மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளி க்கு, பன்றியின் சிறுநீரகங்கள்- கல்லீரல் பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை

மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளி க்கு, பன்றியின் சிறுநீரகங்கள்- கல்லீரல் பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை

மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளி க்கு, பன்றியின் சிறுநீரகங்க ளையும் கல்லீரலையும் ஒரு சீனக் குழு பொருத்தியுள்ளது. இது உலகில் முதன்முறையாக, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பல உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு வழிவகுக்கக்கூடும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 53 வயதான அந்த நபரின் உடலில் பொருத்தப்பட்ட உறுப்புகள் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் செயல்பட்டன. பின்னர், அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி இந்த ஆய்வு முடிவுக்குக் கொண்டுவரப் பட்டது.

வேற்று இன உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Xenotransplantation), அதாவது ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உறுப்புகள் அல்லது திசுக்களை மாற்று அறுவை சிகிச்சை செய்வது, நோயாளிகளை நிச்சயமற்ற அல்லது அதைவிட மோசமான நிலைக்குத் தள்ளும் உலகளாவிய உறுப்புப் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவக்கூடும்.

“பன்றியிலிருந்து மனிதனுக்கு முழு கல்லீரல் மற்றும் இருபக்க சிறுநீரகங் களை சரியான இடத்தில் பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை செய்வதற் கான சாத்தியக்கூறுகளுக்கு இந்த ஆய்வு ஆரம்பகட்ட ஆதாரங்களை வழங்கு கிறது,” என்று அந்த ஆய்வுக் குழு, மே 29 அன்று ‘மெட்’ (Med) என்ற சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

Scroll to Top