உலகளாவிய பற்றாக்குறைகள் மற்றும் விநியோகச் சங்கிலி அழுத்தங்கள் இருந்தபோதிலும், மலேசியாவின் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விநியோகம் சீராக உள்ளது என்று சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது.
நோயாளிகளின் தொடர் சிகிச்சை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பீதியை விட தரவுகளின் அடிப்படையிலேயே நிலைமை கையாளப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கெஃப்லி அஹ்மத் கூறினார்.
X தளத்தில் அவர் பதிவிட்ட ஒரு பதிவில், மே 8 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் உள்ள 71.9 சதவீத மருந்துகளும் 81.7 சதவீத மருத்துவ உபகரணங்களும் குறைந்த அபாயம் உள்ளவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.
“அதிக அபாயம் உள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு, சீரான மற்றும் போதுமான விநியோகத் தை உறுதிசெய்ய பல்வேறு தணிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன,” என்றும் அவர் மேலும் கூறினார்.
சீனா, ஜப்பான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் மூலோபாய ஒத்துழைப்புடன் இறக்குமதி விநியோகச் சங்கிலிகளை மறுஆய்வு செய்யும் ஒரு சிறப்புப் பணிக்குழு மூலம், அமைச்சகம் தனது விநியோக ஆதாரங்களையும் பல்வகைப்படுத்தி வருவதாக சுல்கெஃப்லி கூறினார்.
மலேசியா தனது உள்ளூர் உற்பத்தித் திறனையும் வலுப்படுத்தி வருவதாகவும், சமீபத்திய ஹைப்போகுளோரஸ் அமில (HOCl) பற்றாக்குறை உள்ளூர் விநியோ கஸ்தர்களால் முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஆதரிப்பதற்காக, கொள்முதல் பிளஸ் ஒப்பந்தத் திட்டமும் செயல்படுத்தப் பட்டுள்ளது.
“நோயாளிகளின் சிகிச்சை தொடர்வதே எங்களின் முக்கிய நோக்கம். நாங்கள் தொடர்ந்து கண்காணித்து, தேவைப் படும் போது உடனடித் தலையீடுகளை மேற்கொள்வோம். மக்களின் ஆரோக்கியத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்,” என்று அவர் கூறினார்.




