Vimarsagan Media

Home » World » ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகளுக்கான குழு உறுப்பினராகத் தேர்வானார் யாஸ்மின் ஷெரிப்,

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகளுக்கான குழு உறுப்பினராகத் தேர்வானார் யாஸ்மின் ஷெரிப்,

வழக்கறிஞரும் குழந்தைகள் உரிமை ஆர்வலருமான யாஸ்மின் ஷெரிஃப், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகளுக்கான குழுவின் (CRC) 2027-2031 காலப்பகுதிக்கான உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்ற ‘குழந்தைகள் உரிமைகள் உடன் படிக்கை’யின் (Convention on the Rights of the Child) உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில், 68 வயதான யாஸ்மின் 189 வாக்குகளில் 136 வாக்குகளைப் பெற்று அதிகபட்ச வாக்குகளைப் பெற்றார்.

இக்குழுவில் அவர் பணியாற்றுவது இது இரண்டாவது முறையாகும்; இதற்கு முன் 2013 முதல் 2017 வரை அவர் இதில் பணியாற்றியுள்ளார்.

2012-ஆம் ஆண்டில் 189 வாக்குகளில் 150 வாக்குகளைப் பெற்று, இக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசியர் என்ற பெருமையை யாஸ்மின் பெற்றார்.

2015 முதல் 2017 வரை இக்குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றிய அவர், கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல், உறுப்பு நாடுகளுடனான கலந்துரையாடல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் ‘பொதுக் கருத்துகள்’ (general comments) வரைவு தயாரிப்பில் பங்களித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டார்.

மேலும், ஆசியான் (Asean) மற்றும் UNCRC ஆகியவற்றிற்கு இடையிலான முக்கியத் தொடர்பாளராகவும் செயல்பட்ட யாஸ்மின், பிராந்திய அளவிலான ஈடுபாடுகளை எளிதாக்கியதுடன், குழந்தைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்

Scroll to Top