Vimarsagan Media

Home » Malaysia » தைப்பிங்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெண், தான் கடத்தப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்குமறுப்பு

தைப்பிங்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெண், தான் கடத்தப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்குமறுப்பு

ஜூன் 16 முதல் தைப்பிங்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர், தான் கடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, சிலாங்கூ ரில் உள்ள காஜாங் மாவட்டக் காவல் தலைமையகத்தில் நேரில் ஆஜராகிப் புகார் அளித்துள்ளார்.

தைப்பிங் மாவட்டக் காவல் நிலையப் பொறுப்புத் தலைவர் காவல் கண் காணிப்பாளர் (Supt) முகமது ஆரிஃப்ரிட்சுவான் எசஹார் (Mohd Ariffridzuan Ezahar), 41 வயதான நூர் அஃபிசா சைனுதீன் (Nor Afiza Zainuddin) நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்தப் புகாரை அளித்ததாகத் தெரிவித்தார்.

“காணாமல் போனதாகக் கருதப்பட்ட அப்பெண், தனது குடும்பத்தினரோ அல்லது வேறு எந்தத் தரப்பினரோ தன்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அப்புகாரின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

“எந்தவொரு தனிநபரின் கட்டாயமும் இன்றி, ஜூன் 16 அன்று அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியேறியதாக விளக்கமளித் தார்,” என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட தாகவும், அப்புகார் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தியதாகவும் முகமது ஆரிஃப்ரிட்சுவான் கூறினார்; மேலும், அவர் பாதுகாப்பாகவும், நல்ல உடல்நலத்துடனும், எவ்விதப் பாதிப்பு மின்றியும் இருப்பதை உறுதிப்படுத்தி யதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, தேவையற்ற பொது மக்களின் கவலைக்கு வழிவகுக்கக் கூடிய வகையில், இச்சம்பவம் குறித்து ஊகங்களை வெளியிடவோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பவோ வேண்டாம் என்று பொ துமக்களை முகமது ஆரிஃப்ரிட்சுவான் கேட்டுக்கொண்டார்.

Scroll to Top