Vimarsagan Media

Home » Malaysia » போலீஸ் துரத்தலுக்குப் பின் பிடிபட்ட இருவர் ஐந்து நாள் காவலில் வைப்பு

போலீஸ் துரத்தலுக்குப் பின் பிடிபட்ட இருவர் ஐந்து நாள் காவலில் வைப்பு

தலை நகரில் போலீஸ் துரத்தலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் ஐந்து நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மார்சஸ், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) வெளியிட்ட அறிக்கையில், அந்த இரு சந்தேக நபர்களும் ஜூலை 1-ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருட்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கானவை என்று நம்பப்படுகிறது. இச்சம்பவம் குறித்து 1952-ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருட்கள் சட்டத்தின் பிரிவு 39B மற்றும் பிரிவு 15(1)(a)-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று அவர் கூறினார்.

ஜூன் 26 அன்று, போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது சந்தேக நபரின் கார் மற்ற மூன்று வாகனங்கள் மீது மோதியதில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது.

வாகனத்தை நிறுத்தும்படி பிறப்பிக்கப் பட்ட உத்தரவை அந்த இருவரும் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, வாங்சா மாஜு (Wangsa Maju) பகுதியிலிருந்து ஜலான் குச்சிங் (Jalan Kuching) வரை போலீஸ் துரத்தல் நிகழ்ந்தது.

Scroll to Top