‘வேட்டி நாள்’ என்பது வேட்டி கட்டுவதை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதம் 6–ந்தேதி (நாளை)யைக் கொண்டாடத் துவங்கியுள்ளனர் இதைத் துவக்கியது யார் என்பதில் சரியான கருத்தொற்றுமை இல்லை. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த சகாயம் ஐ. ஏ. எஸ். பொங்கலை ஒட்டி ‘வேட்டி தினம்’ கொண்டாடுவோமே என ஆலோசனை சொன்னார்.பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களில் வேட்டி கட்டிக்கொண்டு தங்களின் வேட்டி தினத்தைக் கொண்டாடினர். 2015 ஜனவரி ஆறாம் நாள் ‘வேட்டி தினம்’ என்று அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.





