நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தல், மலாய் மக்களின் ஒற்றுமை அந்தச் சமூகத்திற்கு அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுத்தரும் என்பதற்கு ஒரு சான்றாகும் என்று டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
தேர்தலில் காணப்பட்ட ஒத்துழைப்பு தெளிவற்றதாக இருந்தபோதிலும், மலாய் மக்களின் அரசியல் வலிமையை ஒருங்கிணைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக அதனை அங்கீகரிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்.
“இருப்பினும், இந்த ஒற்றுமையின் மூலம் கிடைக்கும் அரசியல் வலிமையை, தவறான செயல்களைப் பாதுகாப்ப தற்கோ அல்லது நியாயப்படுத்து வதற்கோ பயன்படுத்தக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
“அதேபோல, மற்ற சமூகங்களின் உரிமைகளையும் நலன்களையும் ஒடுக்குவதற்கோ அல்லது மறுப்பதற்கோ அதைப் பயன்படுத்தக்கூடாது. மாறாக, அது அதற்கு நேர்மாறான நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்,” என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
பாரிசான் நேசனல் (BN) கட்சி போட்டியிட்ட 56 இடங்களில் 48-ஐக் கைப்பற்றி, மாநிலத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
தேர்தலுக்கு முன்னதாக, பெரிக்காத்தான் நேசனல் (PN) போட்டியிடாத தொகுதி களில், அம்னோ (Umno) அல்லது பாரிசான் நேசனல் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பாஸ் (PAS) கட்சி தனது உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர் களைக் கேட்டுக்கொண்டிருந்தது.




