காஜாங், ஜாலான் ரெக்கோ (Jalan Reko) பகுதியில் நேற்று ஒரு வாகனத்தில் பயணித்த வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ‘ஷபு’ (மெத்தாம் பேட்டமைன்) என்று சந்தேகிக்கப்படும் படிக வடிவிலான தூள் அடங்கிய, 2.13 கிராம் எடையுள்ள மூன்று வெளிப்படை யான பிளாஸ்டிக் பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர்.
ஒரு வெளிநாட்டு ஆணுடன் வெள்ளை நிற ஹோண்டா சிட்டி (Honda City) காரில் பயணித்த அந்தப் பெண், மாலை சுமார் 6.15 மணியளவில் போலீஸ் சோதனையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்டக் காவல் தலைவர் (ACP) நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
காஜாங் மாவட்டக் காவல் தலைமையக த்தின் (IPD) குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புப் பிரிவின் (BPJKK) ரோந்து வாகனப் பிரிவு (MPV) அதிகாரிகள், சோதனையிடுவதற்காக அந்த வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்ட னர். ஆனால், ஆண் ஓட்டுநர் அதற்கு இணங்க மறுத்து, செமெஞ்சே (Semenyih) திசையில் தப்பிச் சென்றார் என்று அவர் கூறினார்.
பின்னர் அந்த வாகனம் ஜாலான் ரெக்கோவை நோக்கிச் செல்லும் SILK நெடுஞ்சாலையில் (Kajang Dispersal Link Expressway) நுழைந்தது. ஆபத்தான முறையில் ஓட்டப்பட்டதாகக் கருதப்படும் அந்த வாகனம், பின்னர் பொதுமக்களின் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்கு ள்ளானது.
“ஜாலான் ரெக்கோ போக்குவரத்து விளக்கு சந்திப்புக்கு அருகில் போலீசார் அந்த வாகனத்தை வெற்றிகரமாக வழிமறித்து நிறுத்தினர். இருப்பினும், ஆண் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்; அதேவேளையில், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி பிடிபட்டார்,” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.




