சிரம்பான்: தாமான் செனவாங் ஜெயாவில் உள்ள ஒரு குடியிருப்பாள ரின் வீட்டில் பட்டாசுகளை வீசியதாகக் கூறப்படும் வீடியோ வைரலானதை தொடர்ந்து மூன்று பதின்ம வயது சிறுவர்கள், விசாரணைகளுக்கு உதவ நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டு ள்ளனர்.
14 முதல் 16 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விண்ணப்பத்தை அனுமதித்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அசாஹர் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
நேற்று மதியம் வீட்டு உரிமையாளரி டமிருந்து எங்களுக்கு புகார் கிடைத்ததை அடுத்து, அனைத்து சந்தேக நபர்களும் நேற்று இரவு சிரம்பான் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
“அனுமதியின்றி பட்டாசுகளை வைத்திருந்த அல்லது பற்றவைத்த குற்றத்தை உள்ளடக்கிய வெடிபொருள் சட்டம் 1957 இன் பிரிவு 8 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவ அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.




