சிலாங்கூர் புக்கிட் செந!தோசா உள்ள ஒரு வீட்டுத் முற்றத்தில் நடந்த கலவர கைகலப்பை தொடர்ந்து விசாரணைகளுக்கு உதவ ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 4.30 மணிக்கு பேஸ்புக்கில் வைரலான ஒரு வீடியோ பதிவை தனது துறை முன்பு கண்டறிந்ததாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறைக்கு இரண்டு தனித்தனி அறிக்கைகள் கிடைத்ததாக அவர் கூறினார்.
“சம்பவத்திற்கான நோக்கம் இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான அதிருப்தி மற்றும் கருத்து வேறுபாடுகளிலிருந்து உருவானது என்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.




