Vimarsagan Media

Home » India » கடந்த சில நாட்கள் சவாலானவை நிச்சயமற்றவை:- பி.வி.சிந்து

கடந்த சில நாட்கள் சவாலானவை நிச்சயமற்றவை:- பி.வி.சிந்து

பெங்களூர், ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பிற்கு செல்லும் வழியில் துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த பி.வி.சிந்து இந்தியா திரும்பினார், முன்னாள் உலக சாம்பியன் போட்டியில் இருந்து விலகுவதை பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) உறுதிப்படுத்தியது.

ஈரானில் நடந்த போரினால் விமானப் போக்குவரத்து தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டது, உலகின் பரபரப்பான அனைத்துலக மையமான துபாய் உட்பட மத்திய கிழக்கின் பல முக்கிய விமான நிலையங்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக மூடப்பட்டன.

திங்களன்று விமானங்கள் பகுதியளவு மீண்டும் தொடங்கப்பட்டதாக துபாய் விமான நிலைய ஆணையம் தெரிவித்தது, முக்கியமாக சிக்கித் தவிக்கும் பயணிகளை மீண்டும் அழைத்து போவதற்காக!

“பெங்களூருக்குத் திரும்பி வந்து பாதுகாப்பாக இருக்கிறேன். கடந்த சில நாட்கள் மிகவும் சவாலானவை மற்றும் நிச்சயமற்ற தன்மை நிறைந்தவை அத்தருணங்கள் . ஆனால் நான் வீடு திரும்பியதற்கு மிகவும் நன்றியுள்ள வளாக இருக்கிறேன்,” என்று சிந்து தனது தளத்தில் எழுதியுள்ளார்

Scroll to Top