Vimarsagan Media

Home » India » கமேனி மறைவுக்கு இரங்கல் 5 நாள் கழித்து இந்தியா!

கமேனி மறைவுக்கு இரங்கல் 5 நாள் கழித்து இந்தியா!

ஈரானின் உச்ச தலைவர் அயதொல கமேனி கொல்லப்பட்ட விவகாரம் அனைத்துலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. சில நாடுகள் அவரின் மறைவிற்கு கண்டனம் தெரிவித்து இரங்கல் தெரிவித்திருந்தன.

ஆனால் இந்தியா அரசு இந்த விவகாரத்தில் மெளனம் காத்துவந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 5 நாள்கள் கழித்து கமேனியின் மறைவிற்கு இந்தியா இரங்கல் தெரிவித்திருக்கிறது.

டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் அலி கமேனிக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியா சார்பில் கையெழுத்திட்டு அந்நாட்டு தூதரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

Scroll to Top