சிலாங்கூர் கோத்தா டாமான்சாராவில் உள்ள ஜாலான் கெஞாலாங் 11/6B இல் உள்ள இரட்டை மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 54 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அக்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக நேற்று காலை 9.09 மணியளவில் அவசர அழைப்பு வந்தது.
வீடு சுமார் 40% எரிந்துவிட்டது, மேலும் பாதிக்கப்பட்டவர் காலை 9.30 மணியள வில் பால்கனியில் மயக்கமடைந்த நிலை யில் காணப்பட்டார்.
காலை 11.15 மணிக்கு பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். “உடல் காவல்துறை யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காலை 9.45 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது என்றும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்புகள் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.




