அனைத்துலக மகளிர் தினம் (International Women’s Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை அங்கீகரித்து, பாலின சமத்துவத்தை வலியுறுத்தவும், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இது பெண்களின் உரிமைகள் மற்றும் நீதிக்கான ஒரு போராட்ட நாளாகவும் பார்க்கப்படுகிறது.




