மேற்கு ஆசியாவில் போர் வெடித்த தைத் தொடர்ந்து, மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை 52,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வளைகுடாப் பகுதியிலிருந்து இந்தியாவுக்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டதாக வெளியுறவு அமைச்சு (MEA) தெரிவித்துள்ளது.
இந்தப் பயணிகளில் 32,107 பேர் இந்திய விமான நிறுவனங்களில் பயணம் செய்ததாகவும், மீதமுள்ளவர்கள் வெளிநாட்டு விமான நிறுவனங்களில் பயணம் செய்ததாகவும் MEA தெரிவித்து ள்ளது.
இந்திய அரசு மேற்கு ஆசியா மற்றும் வளைகுடாப் பிராந்தியத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், குறிப்பாக போக்குவரத்தில் அல்லது குறுகிய கால வருகைகளின் போது சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நலனில் கவனம் செலுத்தி வருவதாகவும் MEA செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களையும், அந்தந்த இடங்களில் உள்ள இந்திய தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வழங்கிய ஆலோசனைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜெய்ஸ்வால் மேலும் கூறினார்.




