பூஜியத்திற்குப் பிறகு வரும் எண்களுக்கு மதிப்பு கூடிக்கொண்டே போகும். அதே போல் மனிதனின் பிறப்பிலிருந்து அவன் மதிப்பு கூடிக்கொண்டே போனால் அவன் வாழ்க்கை சிறக்கும். அதாவது, பூஜியத்திலிருந்து தொடங்கி நம் மதிப்பை நாம் உயர்த்திக் கொண்டே செல்ல வேண்டும்.
வாழ்க்கையில் உழைப்பும், திறமையும், புத்தி கூர்மையும் இருந்தால், அருவி போல் உயரும் எண்கள் உங்கள் மதிப்பை மென்மேலும் கூட்டும். அது எதுவும் உங்களுக்கு இல்லை என்றால் வாழ்க்கை பூஜியத்திலேயே நிற்கும். வாழ்க்கையில் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது மிக மிக முக்கியம். இன்றைய சூழ்நிலைக்கேற்ப எவ்வளவோ முக்கியமான, அதிலும் இப்போது இருக்கின்ற, இப்போது வாழ்கின்ற வாழ்க்கை நிலைக்கு வேண்டி பற்பல புதிய விஷயங்களை கற்று, அறிந்து, தெரிந்து உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.
அப்படித் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகமிக அவசியமும் கட்டாயமும் கூட. அதிலும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல. அவரவர் வாழ்க்கை நிலைக்கு, சூழலுக்கு ஏற்ப என்னென்ன தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.




