புக்கிட் டாமான்சாரா ஜாலான் கெலெங்காங் சாலையில் ஒரு “மினி கேசினோ” நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஹாங்காங் நாட்டவர் உட்பட மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப் பட்டனர்.
27 முதல் 49 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள், பிற்பகல் 3.30 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில் தடுத்து வைக்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் தங்கள் மினி சூதாட்ட விடுதியை விளம்பரப்படுத்த பல இணையதளங்களையும் சமூக ஊடக தளங்களையும் பயன்படுத்தினர். “இந்த நடவடிக்கைகளுக்கான இடங்களாக, இந்தக் கும்பல் ஆசியப் பிராந்தியத்தில் உள்ள தைவான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைக் குறிவைத்தது,” என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இந்தக் குழு 2022 முதல் மினி சூதாட்ட விடுதியை நடத்தி வருவதாக பாடில் கூறினார். சூதாட்ட விடுதிக்கு மக்களை சூதாட அழைப்பதை குற்றமாக்கும் 1953 ஆம் ஆண்டின் பொது சூதாட்ட விடுதிகள் சட்டத்தின் பிரிவு 4(1)(g)-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார். செல்லுபடி யாகும் பார்வையாளர் அனுமதிச் சீட்டு இல்லாததற்காக ஹாங்காங்கைச் சேர்ந்த சந்தேக நபர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




