Vimarsagan Media

Home » Malaysia » சிரம்பான் இரண்டு மாடி புத்தகக் கடையில் தீ

சிரம்பான் இரண்டு மாடி புத்தகக் கடையில் தீ

சிரம்பான், ஜாலான் டத்தோ ஷே அமாட் சாலையில் அமைந்துள்ள இரண்டு மாடி புத்தகக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) நேற்று இரவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் JBPM-இன் மூத்த செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி முகமது ஹனாஃபி வாஹித், இரவு சுமார் 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

, அந்த வளாகத்தில் தீப்பிழம்புகள் அத்தருணத்தில் இன்னும் கொழுந்து விட்டுஎரிந்துகொண்டிருப்பதும், தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதும் தெரியவந்து உள்ளது என்றார்

இதற்கிடையில், நெகிரி செம்பிலான் JBPM தொடர்பு அதிகாரி முகமது ஷஸ்வான் தாஜுதீன், செனாவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு பணியாளர்கள் அம்பாங்கானில் உள்ள தாமான் புக்தியில் ஏற்பட்ட காட்டுத்தீயையும் அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நேற்றிரவு சுமார் 9 மணியளவில் அறிக்கை பெறப்பட்டதாகவும், ஆனால் இருள் சூழ்ந்திருந்ததால் பாதிக்கப்பட்ட பகுதியின் அளவு இன்னும் தீர்மானிக்கப் படவில்லை என்றும் அவர் கூறினார்.

அறிக்கையின்படி, தீ விபத்து ஒரு மலைப்பகுதி உள்ள வனப்பகுதியில் ஏற்பட்டுள்ளது என்றும், தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் தெரியவந்து ள்ளது. அந்தக் காடு ஒரு குடியிருப்புப் பகுதிக்கு அருகில் அமைந்திருந்தாலும், நிலைமை கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும் அவர் கூறினார்

Scroll to Top