Vimarsagan Media

Home » Malaysia » உறவினர்களுடன் உல்லாச பட்டாசு வெடிப்பு :- எழுவர் காயம் நபர் கைது

உறவினர்களுடன் உல்லாச பட்டாசு வெடிப்பு :- எழுவர் காயம் நபர் கைது

இங்குள்ள டோபியார் கிராமம் ஒன்றில், பட்டாசு வெடித்து ஏழு பேர் காயமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெண்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ரோட்ஸி அபு ஹசன், இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை, ஈத் இரவில் நடந்திருக்கலாம் என்று நம்பப் படுவதாகக் கூறினார்.இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து காலை 10 மணிக்குத் தமக்குத் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.

அந்தத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அதே நாளில் பெண்டாங் மாவட்ட காவல் தலைமையக (IPD) பகுதியில் அந்த நபரைக் கைது செய்தனர். “மேலும் விசாரணையில், ஹரி ராயா பண்டிகையின் வருகையைக் கொண்டாடுவதற்காக மார்ச் 20 அன்று, சந்தேக நபர் தனது ஆறு உறவினர் களுடன் பட்டாசுகளை வெடித்ததை ஒப்புக்கொண்டார். இருப்பினும், பட்டாசு பிளாஸ்டிக் உறையிலேயே பட்டாசு வெடித்ததாகவும், அதனால் வெடிப்பு ஏற்பட்டு அருகிலிருந்த மற்றவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது,” என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தால் சந்தேக நபர் உட்பட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முகங்களிலும் உடல்களிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்கள் பெண்டாங் மருத்துவமனையில் வெளிநோயாளி களாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்குக் கடுமையான கண் காயங்கள் ஏற்பட்டதால், மேலதிக சிகிச்சைக்காக அவர் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு (HSB) அனுப்பப்பட வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.

இந்த விசாரணை, தண்டனைச் சட்டத்தின் 337-வது பிரிவின் கீழ் நடத்தப்படுகிறது. இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது RM1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.”

Scroll to Top