சிரம்பானில் 68 ஆண்டுகளாக இயங்கி வந்த ஒரு குடும்பத்திற்குச் சொந்தமான புத்தகக் கடை தீ விபத்தில் நேற்று அழிந்தது. இதனால் ஏற்பட்ட இழப்புகள் சுமார் 4 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டு ள்ளது.
மூன்றாம் தலைமுறை உரிமையாளரான 48 வயதான காதர் மொஹிதீன் பஷீர் அமாட், இந்தச் சம்பவம் குடும்பத் தொழிலை அழித்தது மட்டுமல்லாமல், பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்ட நினைவுகளையும் அழித்துவிட்டது என்று கூறினார்.
SBC புக்ஸ் & ஸ்டேஷனரி Sdn Bhd நிறுவனத்தின் இயக்குநர், தீ விபத்தில் கடையின் வளாகம் முழுவதும் மற்றும் அதன் சரக்குகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டதாகக் கூறினார்.
“இந்தக் கடை ஒரு வியாபார இடம் மட்டுமல்ல, நானும் என் உடன்பிறப்புகளும் வளர்ந்த இடமும் கூட. புத்தகக் கடை கீழே இயங்கிக் கொண்டிருந்தபோது, நாங்கள் மாடியில் வசித்து வந்தோம். இது எங்கள் தொழிலைப் பாதித்தது மட்டுமல்லாமல், இங்குள்ள எங்கள் நினைவுகளையும் அழித்துவிட்டது,” என்று அவர் கூறினார்.




