கோலாலம்பூர் மாநகராட்சியால் (DBKL) பராமரிக்கப்படும் சாலைத் தடுப்பிலி ருந்து மரம் விழுந்து உயிரிழந்த தம்பதியினருக்கு, கோலாலம்பூர் மேயர் RM824,180 இழப்பீடு வழங்க வேண்டும் என இங்குள்ள அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலஞ்சென்ற 30 வயதான புன் முன் லாப்பின் சார்புடையோரான 61 வயதான கூய் லிங் சிம் மற்றும் 63 வயதான புன் கோக் ஹோய் ஆகியோர், கோலாலம்பூர் மேயரை பிரதிவாதியாகக் கொண்டு தாக்கல் செய்த வழக்கை அனுமதித்த பின்னர், நீதிபதி எஃபாண்டி நஸிலா அப்துல்லா இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
இறுதிச் சடங்கு செலவுகளுக்காக RM26,180, சார்புடையோரின் இழப்பிற்காக RM768,000, மற்றும் துயர இழப்பீடாக RM30,000 ஆகியவற்றை நீதிமன்றம் வழங்கியது.
மார்ச் 9 அன்று வழங்கிய தனது தீர்ப்பில், விழுந்த மரம் DBKL-இன் பராமரிப்பில் இருந்ததாகவும், அலட்சியமான கண்காணிப்பு மற்றும் பராமரிப்பின் விளைவாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் எஃபாண்டி தீர்ப்பளித்தார்.
“விழுந்த மரம் DBKL-இன் பராமரிப்பில் இருந்தது, எனவே அதன் பொறுப்பு தெளிவாகவும் உறுதியாகவும் நிறுவப்பட்டுள்ளது. அந்த மரம் மிகவும் பெரியதாகவும், முறையாகப் பராமரிக்கப்படாமலும் இருந்தது என்பதை பிரதிவாதியும் ஒப்புக்கொண்டார்,” என்று நீதிபதி கூறினார்.
மேலும், அந்த மரத்தில் வெட்டுதல், சீரமைத்தல் அல்லது கத்தரித்தல் போன்ற பராமரிப்பு அல்லது கண் காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டதைக் காட்டும் ஆவண ஆதாரங்களை DBKL வழங்கத் தவறிவிட்டது என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது.
கூடுதலாக, அந்த மரம் தனது பராமரிப்பில் இருந்தது என்பதை பிரதிவாதி மறுக்கவில்லை என்பதையும், இந்த நிலைப்பாட்டை பிரதிவாதியின் சொந்த சாட்சியே உறுதிப்படுத்தி யதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.




