Vimarsagan Media

Home » Malaysia » பயணிகளைக் கவரும் கேஎல்சிசியில் அதிகமான சிசிடிவி கேமராகள்!

பயணிகளைக் கவரும் கேஎல்சிசியில் அதிகமான சிசிடிவி கேமராகள்!

புகைப்படத் தரகர்கள் பிரச்சினையைக் கையாள்வதற்காக, இங்குள்ள ஜாலான் அம்பாங்கில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களின் சுற்று வட்டாரத்தில் மேலும் பல மூடிய-சுற்று தொலைக்காட்சி (CCTV) கேமராக்கள் நிறுவப்படும்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் பகுதிகளில் CCTV கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து, KLCC பிராப்பர்ட்டி ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) ஆகியவற்றுடன் தனது அலுவலகம் மேலும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று பிரதமர் துறை (கூட்டரசு பிரதேசஅமைச்சர் ஹன்னா யோ கூறினார்.

“CCTV-க்கள் KLCC நிர்வாகத்தின் கீழ் உள்ளன. அனுமதியின்றி வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணும் வகையில், மேலும் CCTV-க்களை எவ்வாறு நிறுவலாம் என்பது குறித்து, நான் அவர்களுடனும் DBKL-உடனும் கலந்துரையாடுவேன்,” என்று அவர் (மார்ச் 28) இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) பெர்சியாரன் KLCC-யில் 18 புகைப்படத் தரகர்கள் ஒருவரையும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காவல்துறை மற்றும் DBKL அமலாக்க அதிகாரிகளின் ரோந்துப் பணிகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று யோ கூறினார்.

“சுற்றுலாப் பயணிகளும் மலேசியர் களும் துன்புறுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை, ஏனெனில் அது நாட்டின் பெயரையும் களங்கப் படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

Scroll to Top