கிள்ளாங்கில், மது மற்றும் போதைப் பொருள் போதையில் இருந்ததாகப் பின்னர் கண்டறியப்பட்ட ஒரு நபர் ஓட்டி வந்த கார் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
20 வயதுகளில் உள்ள அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் ஜாலான் ராயா பாராட்லிருந்து கிள்ளாங் நகர மையத்தை நோக்கி அதிவேகமாக அபாயகரமாக வாகனம் ஓட்டிச் சென்றது காணப்பட்டது.
“காலை 11.40 மணிக்கு எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதுவதற்கு முன்பு, அந்த ஓட்டுநர் பல வாகனங்களை முந்திச் சென்றதாக நம்பப்படுகிறது,” என்று கிள்ளாங் தெற்கு காவல்துறைத் தலைவர் லிம் ஜிட் ஹுவே கூறியதாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.
இந்த மோதலால் 30 வயதுகளில் உள்ள அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றொரு காரின் மீது தூக்கி வீசப் பட்டதாக லிம் கூறினார். அவர் சம்பவ இடத்திலேயே தனது காயங் களால் உயிரிழந்தார்.
இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு டாஷ்கேம் வீடியோ கிளிப்பில், எதிர் பாதையில் முந்திச் சென்ற ஒரு கார், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதியது காட்டப்பட்டது




