Vimarsagan Media

Home » Malaysia » செபெராங் பெராய் வட்டார மக்கள் இவர்களை அறிந்தால் புகாரளியுங்கள்

செபெராங் பெராய் வட்டார மக்கள் இவர்களை அறிந்தால் புகாரளியுங்கள்

மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தத்தமது வீடுகளை விட்டு வெளியேறிய பின்னர் திரும்பாத, காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட இரண்டு நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

செபெராங் பெராய் செலாத்தான் காவல் நிலையத் தலைவர் கண்காணிப்பாளர் ஜே ஜனவரி சியோவூ கூறுகையில், காணாமல் போன முதல் நபர், 44 வயதான லிம் ஹாக் செங் என்ற ஆண் என்றும், அவர் மார்ச் 25 முதல் காணாமல் போயுள்ளார் என்றும் தெரிவித்தார்.

“மற்றொருவர், 39 வயதான நூர் ஐன் அரிஃபென் என்ற பெண் ஆவார். இவரும் கடந்த வாரம் முதல் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு நபர்களையும் கண்டுபிடிப்ப தற்கான முயற்சிகள் தற்போது காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இவ்விரு நபர்கள் குறித்தும் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது அவர்களைப் பார்த்தவர்கள், விசாரணை அதிகாரி எஸ்.எம். டி. கங்கேஸ்வரியை 010-375 0353 என்ற எண்ணில் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகுவதன் மூலமோ விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்று அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

Scroll to Top