Vimarsagan Media

Home » Malaysia » மாஸ் இம்மாதம் கே எல்-லண்டன் வழித்தடத்தில் கூடுதல் விமானச்சேவை

மாஸ் இம்மாதம் கே எல்-லண்டன் வழித்தடத்தில் கூடுதல் விமானச்சேவை

மத்திய கிழக்கு மோதலால் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில், மலேசியா ஏர்லைன்ஸ் இந்த மாதம் கோலாலம்பூர்-லண்டன் வழித்தடத்தில் கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது.

இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மலேசியா ஏவியேஷன் குழுமத்தின் (MAG) விமானப் போக்கு வரத்து வணிகப் பிரிவின் தலைமை வர்த்தக அதிகாரி டெர்செனேஷ் அரிசந்திரன், ஏப்ரல் 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தற்காலிக விமானங்களை இயக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

மாறிவரும் பயணச் சூழல்களுக்கு ஏற்ப விமான நிறுவனம் தனது வலைய மைப்பை விரிவுபடுத்தி, செயல் பாடுகளைச் சரிசெய்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

மத்திய கிழக்கு மோதல், விமான நிறுவனங்களை விமானங்களின் வழித்தடங்களை மாற்றவும், பயண நேரத்தை நீட்டிக்கவும், சில சேவைகளை நிறுத்தி வைக்கவும் கட்டாயப்படுத்தி யுள்ளது. இது, பொதுவாக வளைகுடா மையங்கள் வழியாகப் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்தைப் பாதித்துள்ளது.

நேற்று, MAG குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி நசருதீன் பக்கர், மத்திய கிழக்கு மோதலால் முக்கிய விமானப் போக்குவரத்து நுழைவாயில்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை, கோலாலம்பூர்-லண்டன் விமான நிலையம் (KLIA) ஒரு இடைவழி மையமாகத் தனது பங்கை வலுப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக MAG கருதுவதாகத் தெரிவித்தார்.

Scroll to Top