சில முதலாளிகள், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கும் முயற்சியாக, சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கு (பெர்கெசோ) சீரற்ற பங்களிப்புகளைச் செலுத்தி வருகின்றனர். பெர்கெசோ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜிஸ் முகமது கூறுகையில், இந்த முதலாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள் சில மாதங்களில் பங்களிப்பு களைச் செலுத்திவிட்டு, மற்ற மாதங்களில் செலுத்தாமல் விட்டு விடுகின்றனர்
இத்தகைய நடைமுறைகள் பொதுவாகப் பதிவேடுகளைச் சரிபார்ப்பதன் மூலம் கண்டறியப்படுகின்றன என்றும், சம்பந்தப்பட்ட முதலாளிகளிடம் பின்தொடர்வதற்காக அமலாக்கக் குழுக்கள் அனுப்பப்படுகின்றன என்றும் அவர் கூறினார். “நாங்கள் பதிவுகளை ஆய்வு செய்து, இரண்டு மாதங்களாகப் பங்களிப்புகள் செய்யப்படவில்லை என்பதைக் கண்டறிந்தால், எங்கள் அமலாக்கக் குழு அந்த இடத்திற்குச் சென்று, ஏன் பணம் செலுத்தப்படவில்லை என்று கேட்கும்.”
“சில முதலாளிகள் செலவுகளைச் சேமிப்பதற்காக இதைச் செய்வதாகக் கூறப்படுகிறது, ஆனால் அது தொழிலாளர்களின் நலனைக் கெடுக்கக் கூடாது,” என்று அவர் இன்று கூறினார். முன்னதாக, கிள்ளானில் நடந்த விபத்தில் கொல்லப்பட்ட அமிருல் ஹபீஸ் ஓமரின் விதவையான 32 வயது நோர் நாடியா அப்துல் மஜித்திடம், பெர்கெசோ வாரிசுதாரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இறுதிச் சடங்கு மேலாண்மைப் பலன்களை அவர் வழங்கினார். முதலாளிகள் தங்கள் தொழிலாளர் களைப் பதிவுசெய்து, சீராகப் பங்களிப்பதை உறுதிசெய்ய, பெர்கெசோ தொடர்ந்து அமலாக்கம் மற்றும் விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.



