Vimarsagan Media

Home » Malaysia » இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நான்கு பேர் (MACC) கைது செய்துள்ளது

இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நான்கு பேர் (MACC) கைது செய்துள்ளது

சுமார் 5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கோரியதாகவும் பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட நான்கு நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.

அந்த இரண்டு விரிவுரையாளர்கள், ஒரு எண்ணெய் நிறுவன அதிகாரி மற்றும் ஒரு பொறியியல் நிறுவன இயக்குநர் ஆகியோர் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் பேராக் MACC அலுவலகத் தில் கைது செய்யப்பட்டதாக MACC வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

பல்வேறு நிறுவனங்களுக்கு ஆராய்ச்சித் திட்டங்களைப் பெற்றுத் தருவதற்கும், பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நிதியைக் கையாடல் செய்வதில் ஈடுபடுவதற்கும் தூண்டுதலாக அவர்கள் இந்த லஞ்சத்தைக் கோரியதாக நம்பப் படுகிறது.

2019 மற்றும் 2025-க்கு இடையில் இந்த நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த அதிகாரியும் நிறுவன இயக்குநரும், சட்டவிரோத நிதியைப் பெறுவதற்காக இரண்டு விரிவுரை யாளர்களுக்கும் பினாமிகளாகச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

“சந்தேக நபர்கள் அனைவரும் சதித்திட்டம் தீட்டியதாகவும், இரண்டு விரிவுரையாளர்களும் லஞ்சத்தை ரொக்கமாகவும், தங்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்பட்டதன் மூலமாகவும் பெற்றதாகவும் நம்பப்படுகிறது.

​​ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ சைஃபுல் எஸ்ரல் அரிஃபின் இந்தக் கைதுகளை உறுதிப்படுத்தினார். மேலும், இந்த வழக்கு ஊழல் தடுப்பு ஆணையம் சட்டம் 2009-இன் பிரிவு 16(a)(A)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக வும் அவர் கூறினார். சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றக் காவல் மனுவுக்காக ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

Scroll to Top