தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், நீக்குமாறு கோரப்பட்ட உள்ளடக்கங்களில் 91 சதவீதம் இணையவழி சூதாட்டம் மற்றும் மோசடிகள் தொடர்பானவை என்று கூறினார்.
“அந்த எண்ணிக்கையில், 61 சதவீதம் சூதாட்டத்தின் கீழும், 30 சதவீதம் மோசடிகளின் கீழும் வருகின்றன. இந்த எண்கள் அதிகரித்து வருகின்றன,” என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள பாகோ உயர் கல்வி மையத்தில் உள்ள துன் சையத் நசீர் சையத் இஸ்மாயில் பாலிடெக்னிக்கின் மினி நூலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பான இணையப் பிரச்சார (KIS) நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர் களிடம் இதைத் தெரிவித்தார்.
மேலும், 81 சதவீத ஆன்லைன் சூதாட்ட உள்ளடக்கங்கள் ஃபேஸ்புக்கிலும், 58 சதவீத மோசடி தொடர்பான உள்ளடக்கங்களும் அதே தளத்திலும் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
“ஆபாச உள்ளடக்கங்களைப் பொறுத்தவரை, 99 சதவீதம் டிக்டாக்கில் இருப்பதாகவும், மிரட்டல் அல்லது துன்புறுத்தலைப் பொறுத்தவரை, 90 சதவீதம் டம்ப்ளரில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இவை அனைத்தும் பொது அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை.” புகார்கள் வரும்போது, MCMC உரிய நடவடிக்கை எடுக்கும்,” என்று அவர் கூறினார்




