இரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த ஒரு இளம் பெண், தானும் தனது காதலன் உடன் மாத்திரைகளை உட்கொண்டு தனது ஐந்து மாத கர்ப்பத்தைக் கலைக்க முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 25 அன்று மாலை 6.50 மணிக்கு மலாக்கா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக மலாக்கா காவல்துறைத் தலைவர் டத்துக் சுல்கைரி முக்தார் கூறினார்.
17 வயதான, 10 மாத கர்ப்பிணியான அந்த இளம் பெண், உடல் முழுவதும் இரத்தக் கறையுடன் மருத்துவமனைக்கு வந்தார். கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதால் அவருக்கு இரத்தப் போக்கு ஏற்பட்டதாகவும், மேலும் கருப்பை முழுமையாகக் கருவை வெளியேற்றத் தவறியதால் ஏற்பட்ட சிக்கல்களையும் அவர் எதிர்கொண்ட தாகவும் நம்பப்படுகிறது.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளம் பெண்ணும் அவரது 18 வயது காதலனுடன்மாத்திரைகளை உட்கொண்டு கர்ப்பத்தைக் கலைக்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
சம்பவத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நபர் அந்தப் பதின்வயதுப் பெண்ணின் வீட்டிலிருந்து கருவை எடுத்து, தனது வீட்டின் பின்புறம் புதைக்கத் திட்டமிட்டதாக நம்பப்படுகிறது.
“இருப்பினும், அந்தக் கரு முதலில் ஒரு காரில் மறைத்து வைக்கப்பட்டது,” என்று ஹரியான் செய்தி நிறுவனம் தெரிவித்தது. தகவலின் அடிப்படையில், விசாரணைக்கு உதவுவதற்காக, அதே நாளில் இரவு 11.40 மணிக்கு ஒரு காவல்துறைக் குழு அந்த ஆண் சந்தேக நபரைக் கைது செய்ததாக அவர் மேலும் கூறினார்.
“சம்பந்தப்பட்ட அந்தப் பதின்வயதுப் பெண் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட உடனேயே, நேற்று பிற்பகல் 3.15 மணிக்குக் கைது செய்யப்பட்டார்,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 318-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.




