பாங்கியில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரி களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு சந்தேகப்படும் கொள்ளை யர்கள் கொல்லப்பட்டனர்.
பண்டார் ஸ்ரீ புத்திரிவில் உள்ள ஜாலான் பெர்சியாரன் செரி புத்ரா 2-ல் இரவு சுமார் 8.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சண்டை நடந்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் கூறினார்.
கிளாங் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த பல கொள்ளைச் சம்பவங்களில் சந்தேக நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
“சம்பவ இடத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, பல தோட்டாக்கள், தோட்டா உறைகள், நான்கு பரங் கத்திகள், வீடு புகுந்து உடைப்பதற்கான உபகரணங்கள், முகமூடிகள் மற்றும் கையுறைகளை காவல்துறை மீட்டெடுத்தது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை கூடுதல் தகவல்களை வழங்கும் என்று குமார் கூறினார்.




