‘வில் அம்பு’ பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் எலும்பு புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், இன்று காலமானார்.வயது 49
ரமேஷ் சுப்ரமணியம் எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் சொந்த ஊரில் நடைபெற உள்ளதாக ரமேஷ் சுப்ரமணியத்தின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




